திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனைக்கு உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர் இந்த நிலையில் பிரசவ வார்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விளக்குகள் கடந்து சில தினங்களாகவே பகலில் எரிந்து வருகின்றது இதுகுறித்து பொதுமக்கள் தலைமை மருத்துவரிடம் தெரிவித்தும் விளக்குகள் அணைக்கப்படவில்லை. எனவே அலட்சியம் காட்டாமல் ஊழியர்கள் சரியான நேரத்தில் விளக்குகள் போட பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.