நீலகிரி வரையாடு (நீலகிரிட்ராகஸ் ஹைலோக்ரியஸ்) அழிந்து வரும் இனம் என்ற நிலையில் இருந்து அகற்ற வேண்டும் என்ற தீர்மானத்துடன், தமிழக அரசு மாநில விலங்கினங்கள் குறித்த ஒத்திசைவுக் கணக்கெடுப்பை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையானது பள்ளிகளில் உடல் ரீதியான தண்டனைகள் வழங்கப்படுவதனை ஒழிப்பதற்கான வழிகாட்டுதல்களை (GECP) வெளியிட்டுள்ளது.
இந்திய விமானப்படை வானிலிருந்து நிலத்தில் உள்ள இலக்கினைத் தாக்கி அழிக்கும் நடுத்தர தொலைவு வரம்பு கொண்ட புதிய வடிவ ஏவுகணையின் பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது.
இது 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது.