உடுமலை அரசு கலைக் கல்லூரியில் இலவச தடகள பயிற்சி முகாம்

76பார்த்தது
உடுமலை அரசு கலைக் கல்லூரியில் இலவச தடகள பயிற்சி முகாம்
திருப்பூர் தடகள சங்கம் மற்றும் உடுமலை அரசு கலைக் கல்லூரி சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான இலவச தடகள பயிற்சி முகாம் மே1 முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தடகள பயிற்சி முகாமில் இன்று நடைபெற்ற நிகழ்வில் உடுமலைப்பேட்டை அரசு கலைக் கல்லூரி முதல்வர் எஸ் கே கல்யாணி மற்றும் திருப்பூர் தடகள சங்க தலைவர் ஆர்பிஆர் சண்முகசுந்தரம் மற்றும் செயலாளர் திரு முத்துக்குமார் அவர்கள் தலைமையில் துவங்கியது. மேலும் இந்த முகாமில் சிறப்பு விருந்தினர்களாக சத்யம் பாபு உடுமலைப்பேட்டை கிரிக்கெட் பயிற்சியாளர் பிரபாகரன் , அவதார் கிரிக்கெட் கிளப் பர்வீஸ் சூர்யா டிரஸ்ட் தலைவர் சண்முகப்பிரியா கலந்து கொண்டார்கள். மேலும் உடுமலைப்பேட்டை தடகள ஆர்வலர்கள், நடைபயிற்சியாளர் சங்க உறுப்பினர்கள், பயிற்சியாளர்கள், கல்லூரி முன்னாள் மாணவர்கள், கல்லூரி தடகள வீரர்கள் மற்றும் சுமார் 100க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
மாணவ மாணவிகளுக்கு தினமும் இரு வேலையாக பால் மற்றும் சிற்றுண்டி தடகள ஆர்வலர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கோடைகால தடகள இலவச பயிற்சி முகாம் திருப்பூர் தடகள சங்கம் மற்றும் அரசு கலைக் கல்லூரி உடுமலைப்பேட்டை உடற்கல்வித்துறை சார்பாக நடைபெற்று வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி