உடுமலையில் கொளுத்தும் வெயில்- குளிர்பானங்கள் விற்பனை ஜோர்

75பார்த்தது
உடுமலையில் கொளுத்தும் வெயில்- குளிர்பானங்கள் விற்பனை ஜோர்
தமிழகத்தில் கோடைவெயில் மக்களை வறுத்தெடுத்து வருகிறது இன்னும் ஓரிரு நாளில் அக்கினி நட்சத்திரம் துவங்க உள்ளது அதற்கு முன்பே கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. உடுமலை மடத்துக்குளம் குடிமங்கலம் பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது இதனால் பகல் நேரங்களில் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை உள்ளது நண்பகல் நேரத்தில் சாலைகளில் வாகனம் மற்றும் மக்கள் நடமாட்டம் குறைவாகவே உள்ளது இரவு நேரத்திலும் புழுக்கம் காரணமாக மக்கள் அவதிப்படுகின்றனர்.
பகல் நேரத்தில் இளைஞர்கள் உள்ளிட்டோர் ஆறு குளம், திருமூர்த்திமலை நீச்சல் குளம் பஞ்சலிங்க அருவி என நீர்நிலைகளை தேடிச் சென்று குளித்து வருகின்றனர். மேலும் தாகம் தணிக்க இளநீர் விற்பனை சூடு பிடித்துள்ளது. உடுமலையில் ஒரு இளநீர் அளவைப் பொறுத்து ரூபாய் 35 முதல் 50 வரை விற்பனை ஆகிறது மேலும் தர்பூசணி கடைகளிலும் காலை முதலே கூட்டம். அலைமோதி வருகிறது. கடைகளில் ஜூஸ் மற்றும் குளிர்பானங்கள் விற்பனையும் உன் மூலமாக நடக்கிறது.

தொடர்புடைய செய்தி