திருப்பூர் தெற்கு மாவட்டம் மடத்துக்குளம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட குமரலிங்கம் பேரூராட்சியில் சுமார் 500 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் முன்னிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா. ஜெயராமகிருஷ்ணன், ஒன்றிய கழகச் செயலாளர் சாகுல் ஹமிது, பேரூராட்சி செயலாளர் ஆச்சிமுத்து, பேரூராட்சி மன்றத் தலைவர் ஷர்மிளா, துணைத் தலைவர் அழகர்சாமி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.