திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில் அருகில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. சுகாதார நிலையத்தை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது கழிவுநீர் மருத்துவமனை முன்பு அதிக அளவு தேங்கியுள்ளது. இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.