திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் நேற்று காலை முதல் ஆங்காங்கே பரவலாக விட்டு விட்டு மழை பெய்தது. இன்று காலை முதல் கணியூர், கடத்தூர், காரத்தொழுவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை இடைவிடாது பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மடத்துக்குளம் பகுதி முழுவதும் குளிர்ந்து காற்றும் குளிர்ச்சியான சூழலும் நிலவி வருகிறது.