பள்ளிகள் விடுமுறை: மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தக்கூடாது

78பார்த்தது
பள்ளிகள் விடுமுறை: மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தக்கூடாது
தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (அக். 15) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகள் நடத்த வேண்டாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி