குப்பைகளுக்கு தீ வைப்பதை தடுக்க வேண்டும்

68பார்த்தது
குப்பைகளுக்கு தீ வைப்பதை தடுக்க வேண்டும்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் ஆங்காங்கே குப்பைகளுக்கு தீ வைக்கப்படுவதால் பொதுமக்கள் பலரும் அவதி அடைந்துள்ளனர். கடுமையான வெயில் வாட்டி வதைக்கும் சூழலில் சாலை ஓரத்தில் குப்பைகளுக்கு தீ வைக்கப்படுவதால் அதன் வெப்பம் பொதுமக்களை பெரிதும் பாதிப்படைய செய்கிறது. மேலும் சுவாச கோளாறும் ஏற்படுகிறது.
இதனால் குப்பைகளுக்கு தீ வைப்பதை தடுத்து, சுகாதார சீர்கேடு ஏற்படாமல் பாதுகாக்க நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி