திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டாரத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கும் சூழலில், காலை 11 மணியிலிருந்து மதியம் 3 மணி வரை பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என மருத்துவர்கள் பலர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதையும் மீறி வெளியில் சுற்றியும், சரியாக தண்ணீர் அருந்தாத பலருக்கு உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டு அதனால் காயங்கள் உண்டாகிறது. சிலருக்கு தலை முழுவதும் சிறுசிறு கொப்பளங்கள் உண்டாவதால் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.