நத்தக்காடையூரில் மாநில அளவிலான ஆண்கள் பெண்கள் கபடி போட்டி

63பார்த்தது
காங்கேயம் நத்தக்காடையூர் மற்றும் பழைய வெள்ளியம்ளையம் உதய நிலா ஸ்போர்ட்ஸ் கிளப் கபடி குழு மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்திய 13 ஆம் ஆண்டு மாநில அளவிலான ஆண்கள், பெண்கள் கபடி போட்டி தங்கம் நகர் திடலில் 2 நாட்கள் இரவு பகலாக நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். ஆண்கள், பெண்கள், 40 வயதிற்கு மேல் உள்ள ஆண்கள் என 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசு பெறும் அணிக்கு ரூ. 60, 000 மற்றும் கோப்பையும், 2ம் பரிசு பெரும் அணிக்கு ரூ. 40000 பரிசும் கோப்பையும் 3, 4 இடம்பெறும் இரண்டு அணிகளுக்கு தலா ரூ. 20, 000 பரிசம் கோப்பையும் வழங்கப்பட்டது. இப் போட்டிங்களானது சர்வதேச கபடி போட்டிகள் போல் மின் ஒளியில் இரவு பகலாக நடைபெற்றது. தமிழ்நாடு, கேலோ இந்தியா போன்ற போட்டிகளில் கலந்துகொண்ட வீரர் வீராங்கனைகள் இப்போட்டிகளில் கலந்து கொண்டனர்.


ஆண்கள் போட்டியில் முதல் பரிசை பி. ஜெ. பிரதர்ஸ் கோவை அணியும் இரண்டாம் பரிசை ஜெயசித்ரா கர்மன்ஸ் திருப்பூர் அணியும் பெண்கள் பிரிவில் முதல் பரிசை சக்தி பிரதர்ஸ் அந்தியூர் அணியும் இரண்டாம் பரிசை பி. கே. ஆர். கல்லூரி கோபி அணியும் பெற்றனர். 40 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் முதல் பரிசை கடலூர் மாவட்ட அணியும் 2ம் பரிசை திருச்சி துறையூர் அணியும் பெற்றனர். மேலும் சிறந்த வீரர்களுக்கு எல். இ. டி. டிவிக்கள் சிறப்பு பரிசாக  வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி