வெள்ளகோவிலில் 3 டன் முருங்கைக்காய் கொள்முதல்

59பார்த்தது
வெள்ளகோவிலில் 3 டன் முருங்கைக்காய் கொள்முதல்
வெள்ளகோவிலில் வாரந்தோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார, பகுதிகளான மேட்டுப்பாளையம் அய்யம்பாளையம், சின்னாத்திபாளையம், பெரியாத்திபாளையம், பாப்பம்பாளையம், மாந்தபுரம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது தோட்டங்களில் அறுவடை செய்யும் முருங்கைக்காய் விற்பனைக்கு கொண்டு வருவார்கள். 40 விவசாயிகள் முருங்கைக்காய் கொண்டு வந்தனர். இந்த முருங்கை காய்களை வாங்குவதற்கு முத்தூர், வெள்ளகோவில், காங்கேயத்தை சேர்ந்த நான்கு வியாபாரிகள் வந்திருந்தனர். அவர்கள் ஒரு கிலோ செடி முருங்கை ரூ. 50க்கும் கரும்பு முருங்கை ரூ 60க்கும் கொள்முதல் செய்தனர். மரம் முருங்கை வரத்து இல்லை என முருங்கை விவசாயிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி