சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் பொருள் மாற்றம்

6279பார்த்தது
சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கொங்கு மண்டலத்தில் முருகப்பெருமாள் குடி கொண்டிருக்கும் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.நாட்டில் வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்கு உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது. சாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளை கூறி அதை கோவில் முன் மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி பெட்டியில் வைக்க உத்தரவிடுவார்.

சாமியிடம் பூ கேட்டு பூ கொடுத்த பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள்.  வ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் ஏதும் கிடையாது.  அடுத்த பொருள் பக்தர்களின் கனவில் உத்தரவாகும் வரை உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும்.  இவ்வாறு உத்தரவான பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அந்த பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.  அது நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம்.

நேற்று முதல் தாராபுரம் நாச்சிமுத்துப்புதூர் பகுதியைச் சேர்ந்த சபாபதி (வயது 48) என்பவர்கள் கனவில் உத்தரவு பொருளாக வேல் வந்துள்ளது. இதை அடுத்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்று முதல் வேல் வைத்து பூஜை செய்யப்படுகிறது. மேலும் கடந்த 2019 ம் ஆண்டுக்குப் பிறகு வேல் வைத்து பூஜை செய்வது இது நான்காவது முறையாகும்.

தொடர்புடைய செய்தி