வருமான வரித்துறை சோதனை - பல கோடி ரூபாய் பறிமுதல்

81பார்த்தது
வருமான வரித்துறை  சோதனை - பல கோடி ரூபாய் பறிமுதல்
கர்நாடகாவில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பெங்களூருவில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சுமார் 16 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. தொழிலதிபர்கள், தங்க வியாபாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில், மொத்தம் 22 கிலோ 923 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. இதுதவிர ரூ.1.33 கோடி ரொக்கம், பினாமி சொத்துக்கள் மற்றும் டிடிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.