கொடுவாயில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்

56பார்த்தது
காங்கேயம் அடுத்த கொடுவாய், எல்லப்பாளையம் ஊராட்சி பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக எல்லப்பாளையம்  ஊராட்சிக்கு உட்பட்ட சாய்ராம் நகர் பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி செய்து தரப்பட்டவில்லை என நேற்று தாராபுரம் அவினாசி சாலையில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அப்பகுதியில் போலிசார் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மறையலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் காவல்துறையின் ஈடுபட்டனர் குடிநீர் பிரச்சினைக்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் யாரும் சாலை மறியல் ஈடுபட வேண்டாம் என்று உறுதி கூறியதின் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி