9 வயது சிறுமியை பலாத்காரம் செய்த களரிப்பயிற்று கற்பிக்கும் பயிற்சியாளருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது. கேரளாவின் கொச்சி நடமா எரூரைச் சேர்ந்த செல்வராஜ் (43) என்பவருக்கு எர்ணாகுளம் போக்சோ நீதிமன்றம், 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2.85 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. தற்காப்பு கலையான களரிப்பயிற்று படிக்க வந்த சிறுமியை, குற்றம் சாட்டப்பட்டவர் ஆகஸ்ட் 2016 முதல் ஜூலை 2017 வரை பலமுறை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.