பழையகோட்டையில் ரூ. 75000 காங்கேயம் இன மாடு விற்பனை

1069பார்த்தது
பழைய கோட்டை மாட்டுத்தாவணியில் ரூ. 75 ஆயிரத்திற்க்கு  காங்கேயம் இன மயிலை பசு மாடு விற்பனை


திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள பழைய கோட்டை மாட்டுத்தாவணியில் உலகப் புகழ்பெற்ற காங்கேயம் இன காளைகள், கன்றுகள்,  பசுமாடுகள் விற்பனைச் சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது இங்கு காங்கேயம் இன பசு மாடுகள், காளைகள், கன்றுகள் மட்டுமே விற்பதும் வாங்குவதும் நடைபெறும். இதன்படி நேற்று காலை 10 மணிக்கு துவங்கிய சந்தையில் திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், கோவை, திருச்சி , திண்டுக்கல் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காங்கேயம் இன மாடுகளை வாங்குவதற்கு பலர் திரளாக கலந்து கொண்டனர். இந்த சந்தையில் நேற்று விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட மொத்தம் 61 காங்கேயம் இன பசு மாடுகள், காளைகள்,  கன்றுகளில் மொத்தம் 38 பசு மாடுகள், காளைகள் , கன்றுகள் நேரடியாக விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டது. இதன்படி சந்தையில் அதிகபட்சமாக 9 மாத சினையுடன் காங்கேயம் இன  மயிலை பசுமாடு ரூ 75, 000க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் சந்தையில் காங்கேயம் இன இளங்கன்றுகள் ஆரம்ப விலையாக ரூ. 42, 000 முதல் விற்பனை செய்யப்பட்டது நேற்று மட்டும் ஒரே நாளில் இந்த சந்தையில் மொத்தம் ரூ 14 லட்சத்திற்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி