உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் பெரும் மழை பெய்து வருவதால், சாலைகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளன. இந்நிலையில், விகாஸ் நகர் பகுதியில், சாலையில் பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவ்வழியாக சென்ற கார் ஒன்று குழியின் ஓரத்தில் சிக்கி ஆபத்தான முறையில் சிக்கியது. அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து பதிலளித்த அதிகாரிகள் உடனடியாக சாலையை சீரமைக்க உத்தரவிட்டனர்.