காங்கேயத்தில் உறவினர்கள் இடையே பிரச்சினை - இருவர் கைது

560பார்த்தது
காங்கேயத்தில் உறவினர்கள் இடையே பிரச்சினை - இருவர் கைது
காங்கேயத்தில் உறவினர்கள் இடையே கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை - இருவர் கைது

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த சிவன்மலை கரட்டுபாளையம் பகுதியில் வசித்து வருபவர் பொன்னுலிங்கம் வயது 42. இவர் தனது குடும்பத்துடன் வசித்து கொண்டு விவசாயம் மற்றும் மாதம் ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த உறவினரான விஷ்ணு வயது 26 என்பவர் சீட்டு பணம் கொடுக்கல் வாங்கலில் பொன்னுலிங்கத்துடன் பிரச்சினை ஏற்பட்டது. இதனை அடுத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பொன்னுலிங்கத்தின் வீட்டிற்கு சென்ற விஷ்ணு மற்றும் நண்பர் பூபதி ராஜா வயது 33 ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி பொன்னுலிங்கத்தை கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிகிச்சையில் இருந்து வந்த பொன்னுலிங்கம் நேற்று காங்கேயம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காங்கேயம் போலிசார் விஷ்ணு மற்றும் பூபதி ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

தொடர்புடைய செய்தி