கர்நாடக மாநிலத்தில் மூன்று கல்லூரி மாணவிகள், இரண்டு மாணவர்கள் காவிரி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ராமநகரா மாவட்டத்தில் உள்ள மேகேதாட்டு என்ற இடத்தில் காவிரி நதி சங்கமிக்கும் பகுதியில் இந்த சோகம் நடந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். இறந்தவர்களில் மூன்று பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் ஹர்ஷிதா (20), அபிஷேக் (20), தேஜாஸ் (21), வர்ஷா (20), நேஹா (19) என அடையாளம் காணப்பட்டனர்.