மூலனூர் அருகே கேரள கழிவுகளை கொட்டிய லாரி சிறை பிடிப்பு!

2266பார்த்தது
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாச்சிபாளையம் பிரிவு என்ற இடத்தில் கேரளாவில் இருந்து கோழி கழிவுகள் மற்றும் இறைச்சிக் கழிவுகளை கொட்ட வந்த ஈச்சர் வாகனத்தை பொதுமக்கள் சிறை பிடித்தனர். சிறைப்பிடித்த வாகனத்தை 7 மணி நேரத்திற்கு பிறகு சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். மேலும் கேரளாவைச் சேர்ந்த கழிவு பொருட்களை தமிழகத்துக்கு ஏற்றுமதி செய்த நிறுவனத்தின் மீது அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி