அமைச்சர் கயல்விழி மூன்றாவது வார்டு பகுதியில் பிரச்சாரம்!

61பார்த்தது
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரம் 3, ஆம் வார்டு பகுதிகளில் ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வணிகர்கள் தையல் தொழிலாளர்கள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பு மக்களை வீடு வீடாக நடந்து சென்று திமுகவின் தேர்தல் அறிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் ஈரோடு நாடாளுமன்ற வேட்பாளர் பிரகாஷ் அவர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது தப்பாட்டம் ஒயிலாட்டம் நாட்டுப்புற பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் திமுகவின் மூன்று ஆண்டு சாதனைகளை எடுத்துக் கூறியும் பெட்ரோல் விலை டீசல் விலை கேஸ் விலை குறைக்கப்படும் என தெரிவித்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.

3, ஆம் வார்டு கவுன்சிலர் ஹைடெக் அன்பழகன் பிரச்சார ஏற்பாடுகளை செய்திருந்தார், நகரச் செயலாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். இதில் ஏராளமான மூத்த திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி