கஞ்சா விற்ற ஒடிசா வாலிபர் கைது

70பார்த்தது
கஞ்சா விற்ற ஒடிசா வாலிபர் கைது
கஞ்சா விற்ற ஒடிசா வாலிபர் கைது

ஊத்துக்குளி அருகே உள்ள கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை நடை பெறுவதாக ஊத்துக்குளி போலீசாருக்கு ரக சிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்ப குதிக்கு விரைந்த போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது வாலிபர் ஒரு வர் கஞ்சாவை மறைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரித்த போது அவர் ஒடிசா மாநிலம் சோனாப்பூர் பகுதியைச் சேர்ந்த அணில் குமார் பட்டின நாயக் (வயது 32) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து சுமார் 2 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி