மயங்கி விழுந்த +2 மாணவி உயிரிழப்பு

61பார்த்தது
மயங்கி விழுந்த +2 மாணவி உயிரிழப்பு
மதுரை மாவட்டம் கட்டகுளத்தை சேர்ந்தவர் அழகர். இவருக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள். இதில் மூத்த மகள் ஆனந்தி வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பள்ளிக்கு சென்ற ஆனந்தி திடீரென்று ஆனந்தி மயங்கி கீழே விழுந்தார். இதனால் பதறிய சக மாணவிகள் ஆசிரியர்களிடம் ஓடிச்சென்று கூறினர். இதையடுத்து ஆசிரியர்கள் மாணவியை உடனடியாக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி