ரயிலில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் காட்சிகள்

54பார்த்தது
திருவள்ளூர் அடுத்த கவரைப்பேட்டை அருகே பயங்கர ரயில் விபத்து ஏறபட்டுள்ளது. சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு ரயில் மோதியதில் 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்து வருகின்றது. மேலும், 4, ஏசி ரயில் பெட்டிகள் தடம்புரண்டுள்ளது. இந்நிலையில், விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்புப்படையினரும் அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்களும் மீட்டு வருகின்றனர். இதையடுத்து, கவரைப்பேட்டை அருகே உள்ள மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளதாக ஆட்சியர் பிரபுசங்கர் தகவல் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி