அரசு மருத்துவக்கல்லூரி மூதாட்டியின் உடல் தானம்

52பார்த்தது
அரசு மருத்துவக்கல்லூரி மூதாட்டியின் உடல் தானம்
அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களின் ஆய்வுக்கு
மூதாட்டியின் உடல் தானம்


ஊத்துக்குளி தாலுகா சர்க்கார் காத்தாங்கண்ணி பாப்பம் பாளையத்தைச் சேர்ந்தவர் மின்னல் கொடி என்ற சரசு (வயது 68). இவர் தனது மறைவிற்குப்பின் மருத்துவ மாணவர்கள் ஆய்வுக்காக தனது உடலை தானம் செய்ய வேண்டும் என்று பதிவு செய்து வைத்திருந்தார். அவருக்கு வாரிசுகள் ஏதும் இல்லை. சகோதரர்கள் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்த நிலையில் உடல்நலக்கு றைவால் சரசு நேற்றுமுன்தினம் இரவு இறந்தார். இதையடுத்த அவரது விருப் பத்தின்படி உடலை நேற்று அவரது சகோதரர் குழந்தைசாமி, உறவினர்கள் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று தானமாக வழங்கினார்கள். மருத்துவக்கல் லூரி அலுவலர்கள் பெற்றுக்கொண்டனர். அவரது 2 கண் களும் ஈரோடு அரசன் மருத்துவமனைக்கு தானமாக வழங் கப்பட்டது. இதற்கு ஊத்துக்குளி அரசு மருத்துவமனை பொறுப்பு மருத்துவ அலுவலர் கார்த்திகேயன், தன்னார்வலர் குன்னத்தூர் கட்டிட பொறியாளர் கிருபாகரன், ஊத்துக்குளி பேரூராட்சி முன்னாள் தலைவர் குமார், ஊத்துக்குளி தாசில் தார் சரவணன் ஆகியோர் தேவையான உதவிகளை செய்த னர்.

தொடர்புடைய செய்தி