குடிப்பழக்கத்தை தாய் கண்டித்ததால் விபரீதம்:
கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
குன்னத்தூர் அருகே உள்ள அனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த குமாரசாமி என்பவரது மகன் ரவீந்திரகுமார் (வயது 21). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு குடிப்ப ழக்கம் இருந்ததாகவும், சம்பவத்தன்று ரவீந் திரகுமார் குடிபோதையில் வீட்டிற்கு வந் ததை அவரது தாய் கண்டித்ததாகவும் தெரி கிறது. இதனால் மனமுடைந்த ரவீந்திர குமார் வீட்டில் தனிமையில் இருந்த போது தூக்குப்போட்டுதற்கொலைசெய்துகொண்டார்.
இது குறித்து குன்னத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் கண்டித்ததில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.