சென்னை ஐஐடி மாணவராகும் 83 வயது தாத்தா

75பார்த்தது
சென்னை ஐஐடி மாணவராகும் 83 வயது தாத்தா
கல்வி கற்க வயது ஒரு பொருட்டல்ல என்பதற்கு இங்கு ஒரு முதியவர் எடுத்துக்காட்டாக மாறியுள்ளார். 83 வயதாகும்
நந்தகுமார் மேனன் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர். தற்போது சென்னை ஐஐடியில் பி.எஸ். செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலைக் கற்கும் மாணவராக உள்ளார். இந்த நான்கரை வருட படிப்பை முடிப்பதற்குள் நந்தகுமார் மேனனுக்கு 87 வயது ஆகிவிடும். மேனனின் கற்கும் ஆர்வத்தையும், சுறுசுறுப்பையும் கண்டு, ஐஐடி அதிகாரிகள் பாடக் கட்டணமான ரூ.6 லட்சத்தை விலக்கு அளித்துள்ளனர்.

1966ஆம் ஆண்டில், திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்ற மேனன், உதவித்தொகையுடன், அமெரிக்காவில் கிரையோஜெனிக் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி