மிரட்டல் புகார்: பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் முற்றுகை

78பார்த்தது
மிரட்டல் புகார்: பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் முற்றுகை
புதுச்சேரியில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்றவர்களை ஊழியர்கள் மிரட்டுவதாக கூறி நிறுவனத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் போராட்டம் நடக்கிறது. ரூ.16,200க்கு செல்போன் வாங்கிய வாடிக்கையாளரிடம் ரூ. 1 லட்சம் கேட்டு ஊழியர் மிரட்டியிருக்கிறார், தாலியை அடமானம் வைத்து பணத்தை கொடுத்ததாக கூறிய அவர் மீதி பணத்தை கொடுக்கவில்லையென்றால் சிறை செல்ல நேரிடும் என மிரட்டப்படுவதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி