திருச்சி சமயபுரம் நால்வரோடு பகுதியில் உள்ள புள்ளம்பாடி வாய்க்கால் பாலத்திற்கு கீழே அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக சமயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினார்.
பின்னர் போலீசார் புள்ளம்பாடி வாய்க்காலில் கிடந்த சடலத்தை பார்வையிட்டனர். சமயபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 20 அடி ஆழத்தில் அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலத்தை மீட்டனர். பின்னர் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.