தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வெளியானதை அடுத்து, அரசிதழில் 10 மசோதாக்களும் சட்டமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 10 மசோதாக்களையும் ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்ட விரோதம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதோடு அம்மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக கருதவேண்டும் என கூறியிருந்தது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு அம்மசோதாக்களை அனுப்பிய 18 நவ., 2023 தேதியில் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்ததாக கருத வேண்டும் என அரசிதழில் கூறப்பட்டுள்ளது.