ஆங்கரையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

2220பார்த்தது
ஆங்கரையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
திருச்சி மாவட்டம் லால்குடி ஆங்கரை பகுதியில் நேற்று லால்குடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மலையப்பபுரம் பஸ் ஸ்டாப் அருகே சந்தேகப்படும்படியாக நின்றிருந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் கஞ்சா விற்றது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆங்கரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குஜிலி என்கின்ற விஷ்வா (26)மீது வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் நடத்தினர். மேலும் அவரிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த ரூ. 3, 000 மதிப்புள்ள 150கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி