துறையூர்: சண்டையை விலக்கச் சென்றவருக்கு விழுந்த அடி

4222பார்த்தது
துறையூர் அருகே உள்ள பெருமாள் மலை அடிவாரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருக்கும் இவரது அருகே வீட்டில் வசிக்கும் மணிமேகலை என்பவருக்கும் தங்கள் வீட்டிற்கு செல்லும் பாதை தொடர்பாக தகராறு நடந்தது. அப்போது பக்கத்து வீட்டுக்காரரான பிரபாகரன் என்பவர் இருவருக்கும் இடையே சமாதானம் பேசுவதற்காக சென்று உள்ளார். இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணன் அவர் தரப்பைச் சேர்ந்த வெங்கடேஷ், கணேசன் ஆகிய மூவரும் சேர்ந்து பிரபாகரனை தாக்கியுள்ளனர். இதுகுறித்து பிரபாகரன் துறையூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அவரை தாக்கிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி