பாஜக ஓபிசி செயலாளர் சூர்யா சிவா செய்தியாளர் சந்திப்பு

566பார்த்தது
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள வாக்கு சாவடி மையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஓ. பி. சி பிரிவின் மாநில செயலாளர் சூர்யா சிவா வாக்களித்தார்.
தமிழகம் முழுவதும் மக்கள் ஒரு மாற்றத்திற்காக தயாராக இருக்கிறார்கள் இந்த தேர்தல் முடிவில் அது கண்டிப்பாக தெரியும். 400 இடங்களைப் பெற்று மீண்டும் மோடி பிரதமராக ஆட்சி அமைப்பார்.

திருச்சி பாராளுமன்ற தொகுதியை பொறு‌த்தவரை எந்த கட்சியினரும் வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்யவில்லை திமுக‌ கூட்டணியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ மட்டுமே வாக்குக்கு பணம் கொடுத்துள்ளார் என தகவல் கிடைத்தது.

திராவிட கட்சிகள் பணத்தை வைத்து வாக்கை வாங்கலாம் என்ற எண்ணம் உள்ளது
பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பணம் வேண்டாம் என்று புறக்கணித்து உள்ளனர்.
தமிழக முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் வாக்குக்கு பணம் வழங்கவில்லை.
பொதுமக்கள் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும். கோவையில் G Pay மூலமாக பாரதிய ஜனதா கட்சியினர் பணம் கொடுத்ததாக திமுகவினர் புகார் தெரிவித்துள்ளனர் என்ற கேள்விக்கு.

தேர்தல் ஆணையத்திடம்
அப்படி புகார் கொடுத்துள்ளனர் இவர்களே இவ்வளவு தெளிவா கொடுக்கும் போது பாஜகவினர் G pay வில் கொடுப்போமா, கொடுக்க வேண்டும் முடிவு செய்தால் எப்படி வேண்டாலும் வேண்டுமானாலும் கொடுக்கலாம் என பேசினார்.

தொடர்புடைய செய்தி