முசிறி பகுதிகளில் திருடியவர் கைது

1554பார்த்தது
திருச்சி மாவட்டம் முசிறி அருகே வடக்கு சொரியம்பட்டியைச் சேர்ந்தவர் மருதை வயது 23. கடந்த 9. 1. 24 அன்று இவரது வீட்டில் மூன்றே முக்கால் பவுன் தங்க நகை திருட்டு போனது
இதேபோன்று
சேருகுடியைச் சேர்ந்த சீனிவாசன் வயது 65 என்பவர் வீட்டில் கடந்த 27 10 2023 அன்று 5 பவுன் தங்க நகையும் மேலும் சிட்டிலரையைச் சேர்ந்த செந்தில்குமார் வயது 48 என்பவர் வீட்டில் 6 பவுன் தங்க நகைகள் திருட்டுப் போனது என முசிறி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி சென்றவரை தேடி வந்தனர். அய்யம்பாளையம் பகுதியில் முசிறி காவல் உதவி ஆய்வாளர் ராஜ்குமார் தனது குழுவினருடன் வாகன சோதனை மேற்கொண்ட போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த நபரை விசாரணை செய்ததில் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் துறையூர் அருகே ஆங்கியத்தைச் சேர்ந்த விக்னேஷ் வயது 21 என்பதும் வடக்கு சொரியம்பட்டி சேர்குடி சிட்டிலரை பகுதிகளில் திருடியதும் தெரிய வந்தது. அவரிடமிருந்து 12 அரை பவுன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் விக்னேஷ் மீது வழக்கு பதிவு. செய்து முசிறி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து முசிறி கிளை சிறையில் அடைத்தனர்

தொடர்புடைய செய்தி