திருச்சியில் சித்தாளை தாக்கிய மேஸ்திரிக்கு காப்பு

77பார்த்தது
திருச்சியில் சித்தாளை தாக்கிய மேஸ்திரிக்கு காப்பு
மணப்பாறை அருகே
இனாம் ரெட்டியப்பட்டியை சேர்ந்த மகேஸ்வரி (36). இவர் பெரியநாயகி சத்திரம் கட்டட மேஸ்திரி குமார் (36) என்பவரிடம் சித்தாளாக வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் குமார், மகேஸ்வரிக்கு சேர வேண்டிய சம்பள பணத்தில் ரூ. 1300ஐ குறைத்து கொடுத்துள்ளார். பேசிய சம்பளத்தை விட குறைவாக கொடுக்கிறீர்கள் என்று மகேஸ்வரி கேட்டதற்கு, குமார் அவரை தாக்கினார். இதுகுறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டையை
சப்இன்ஸ்பெக்டர் நிஜாமுதீன் வழக்கு பதிந்து குமாரை கைது செய்து விசாரித்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி