தமிழகத்தில் மொத்தம் 39 லோக்சபா தொகுதிகள் உள்ள நிலையில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை நேற்று மதியம் 3மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம்
வெளியிட்டுள்ளது. மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் அரசியல் கட்சியினரின் விளம்பர வாசகங்கள் ஆகியவற்றை அழிக்கும் பணியில் நகராட்சி மற்றும் வருவாய்த்துறை பணியாளர்கள் ஈடுபட்டனர்.