BREAKING: மக்களவை தேர்தல் தேமுதிக அதிரடி

119972பார்த்தது
BREAKING: மக்களவை தேர்தல் தேமுதிக அதிரடி
"நடைபெறவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் பாராளுமன்ற தேர்தல் விருப்ப மனுக்களை மார்ச் 19 அன்று காலை 11.00 மணியில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை மார்ச் 20 புதன்கிழமை மாலை 5 மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும். நேர்காணல் மார்ச் 21 அன்று நடைபெறும்" என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அதிமுகவுடன் தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றுவரும் நிலையில் 40 தொகுதிகளுக்கும் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என கூறியிருப்பது தனித்து போட்டியிட எடுத்த முடிவா என சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்தி