இளைஞரை உணவகத்தில் புகுந்து கொன்ற கும்பல்

102951பார்த்தது
மகாராஷ்டிரா மாநிலம் இந்தாபூரில் இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவினாஷ் தன்வே என்ற நபர் தனது நண்பர்களுடன் மதிய உணவு சாப்பிட வந்தபோது மர்ம நபர்கள் அவரைக் கொலை செய்தனர். நாற்காலியில் அமர்ந்திருந்த அவரை பின்னால் வந்த இருவர் முதலில் துப்பாக்கியால் சுட்டனர். அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தவுடன் மேலும் 5 பேர் வந்து கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி