திருச்சியை அடுத்த ராம்ஜிநகர் அருகே புங்கனூர் சேர்ந்த குமரேசன்(50). இவர் வண்ணாங்கோவிலில் தையல் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று இவர் டூவீலரில்
வண்ணாங்கோவிலை சேர்ந்த செபஸ்தியான் ஜேம்ஸ் (53) என்பவருடன் சொந்த அலுவல் காரணமாக திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது,
அவ்வழியே அதிவேகமாக வந்த மற்றொரு டூவிலர் இவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட குமரேசன், ஜேம்ஸ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு
மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று காலையில் சிகிச்சை பலனின்றி குமரேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் ராம்ஜிநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடததி வருகின்றனர்.