மர்மமான முறையில் எரித்து கொல்லப்பட்ட இளைஞர்

75பார்த்தது
திருச்சி உய்யக்கொண்டான் திருமலை பகுதியில் இன்று நள்ளிரவு சுமார் இரண்டு மணியளவில் உய்யகொண்டான் ஆற்றின் கரையோரம் யாரோ ஒருவரை மர்ம‌ நபர்கள் தீயிட்டு கொளுத்தி உள்ளதாக திருச்சி அரசு மருத்துவமனை வளாகக் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் எறிந்த நிலையில் சடலம் கிடந்த இடத்தில் சோதனை செய்து தடயங்களைச் சேகரித்தனர். இதையடுத்து, ஆம்பூலன்ஸ் மூலம் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் எரிந்த நிலையில் இருந்தது இளைஞர் என்பது மட்டும் தெரியவந்துள்ளது. ஆனால், இதுவரை கைப்பற்றப்பட்ட சடலம் யார்? என்பது தெரியவில்லை, பணத்தகராறில் யாராவது கடத்தி வந்து கொலை செய்துள்ளனரா? என் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி