திருச்சி சுப்பிரமணியபுரம் பேராசிரியர் காலனியை சேர்ந்த வர் செல்வராணி (48). இவரது தந்தை செபாஸ்டியன் (78). இவர் நேற்று முன்தினம் சுப்பிரமணியபுரம் திருச்சி-புதுக் கோட்டை மெயின் ரோட்டில் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த பீமநகரை சேர்ந்த கலில்ரகுமான் (22) என்பவர் ஓட்டி வந்தமோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த செபாஸ்டியனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச் சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரி ழந்தார். இதுகுறித்து செல்வராணி கொடுத்த புகாரின் பேரில் திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.