கர்நாடக மாநிலத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ரங்கராஜ் என்பவர் இளம்பெண் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், அப்பெண்ணின் பிணத்துடன் உடலுறவு கொண்டதற்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. அதை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்த நிலையில், சட்டப்படி இறந்த உடலை மனிதராக கருத முடியாது என்றும் இந்திய தண்டனை சட்டம் இதற்கு பொருந்தாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.