கஞ்சா விற்பனை செய்த அக்கா தங்கை 4 கிலோ கஞ்சாவுடன் கைது.

2914பார்த்தது
கஞ்சா விற்பனை செய்த அக்கா தங்கை 4 கிலோ கஞ்சாவுடன் கைது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் இரண்டு கஞ்சா மொத்த வியாபாரிகள் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், அங்கு சென்ற போலீசார், மண்ணச்சநல்லூர் அழகு நகரில் சந்தேகத்திற்கு இடமாக தங்கி இருந்த இரண்டு பெண்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர்கள் இருவரும், புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டி மிலிட்டரி காலனியை சேர்ந்தவர்களான பாலகிருஷ்ணன் மனைவி வசந்தி (56), நாராயணன் மனைவி வனிதா (51) என்பதும் இவர்கள் இருவரும் அக்கா தங்கை என தெரியவந்தது.

மேலும் இவர்கள் இரண்டு பேரும் மண்ணச்சநல்லூர் அழகு நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி, ஆந்திரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி அதை மண்ணச்சநல்லூர், நம்பர் 1 டோல்கேட், சமயபுரம் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து இவர்களை பல்வேறு மாவட்டங்களில் தேடி வரும் நிலையில் புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் 110 கிலோ கஞ்சா வழக்கில் இவர்கள் இரண்டு பேரும் தலைமறைவாக இருந்த காரணத்தால், கஞ்சா வியாபாரிகள் வசந்தி, வனிதா ஆகியோரை புதுக்கோட்டை டவுன் போலீசாரிடம் மண்ணச்சநல்லூர் போலீசார் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி