100 நாள் வேலை தராததை கண்டித்து கஞ்சி காய்ச்சும் போராட்டம்

70பார்த்தது
துறையூர் அருகே 100 நாள் வேலை தராது கண்டித்து பொதுமக்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம். திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த எரகுடி கிராமத்தில் பொது மக்களுக்கு முறையாக 100 நாள் வேலை வாய்ப்பு வழங்காததை கண்டித்தும் இது பற்றி பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் பொதுமக்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துறையூர் தாசில்தார் வனஜா பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க ப்படும் எனவும் பயனாளிகளை முறையாக தேர்வு செய்து அனைவருக்கும் 100 நாள் வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

தொடர்புடைய செய்தி