விளையாடச் சென்ற சிறுமி மாயம் - தந்தை போலீசில் புகார்

1541பார்த்தது
விளையாடச் சென்ற சிறுமி மாயம் - தந்தை போலீசில் புகார்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கீழபெருங்காவூர் வி. துறையூரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது 17 வயதான மகள் நேற்று கோக்கோ விளையாட பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனை தொடர்ந்து பெற்றோர்கள் அந்த சிறுமியை பல இடங்களில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் கிடைத்தால் தான் தனது மகளை காணவில்லை என புருஷோத்தமன் சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி