திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சியில் உள்ள பேருந்து நிலையத்தில் கோடைக்கால தண்ணீர் பந்தலை நகராட்சி ஆணையர் குமார் தொடங்கி வைத்து பயணிகளுக்கு தாகம் தணிக்க தண்ணீர் வழங்கினார்.
மேலும் இந்த தண்ணீர் பந்தல் கோடைக்காலம் முடியும் வரை தொடர்ந்து செயல்படும் என நகராட்சி ஆணையர் குமார் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் நகராட்சி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.