சமயபுரம் அருகே ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்

57பார்த்தது
திருச்சி லால்குடி ஆங்கரை பகுதியை சேர்ந்த விஜய் ரசிகர் நிர்வாகியும் ரவுடியுமான நவீன் குமார் நேற்று முன்தினம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்த விசாரணையில், கலைப்புலி ராஜாவுக்கும் நவீன் குமாருக்கும் இடையே நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது. இந்த சம்பவம் காரணமாக முன் விரோதத்தில் நவீனை வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில், அதே பகுதியை சேர்ந்த ரவுடி ராஜா என்கிற கலைபுலி ராஜாவை லால்குடி போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் கலைபுலி ராஜா மற்றும் அவரது நண்பர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது சமயபுரம் அருகே உள்ள சிறுகனூர் வனப்பகுதியில் பதுங்கி இருந்த கலைப்புலி ராஜா மற்றும் அவரது நண்பர் ஸ்ரீநாத் ஆகியோரை பிடிக்க முயன்றனர். அப்போது ராஜா தான் வைத்திருந்த அரிவாளை வைத்து போலீசாரை தாக்க முற்பட்ட போது போலீசார் கலைப்புலி ராஜாவை வலது காலில் சுட்டு பிடித்தனர். தொடர்ந்து ராஜாவின் நண்பர் ஸ்ரீநாத் தப்பிக்க முயன்ற போது அங்கிருந்த ஒரு கல்லில் மோதி கீழே விழுந்ததில் அவரது கால் முறிந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ரௌடி கலைப்புலி ராஜா திருச்சி அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். தப்பிக்க முயன்று கால் முறிவு ஏற்பட்டுள்ள ஸ்ரீநாத் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்தி