அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் - ஒருவர் பலி

70பார்த்தது
அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் - ஒருவர் பலி
சேலம் உத்தமசோழபுரம் அருகே சேலத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் மீது மோதியது. இதில், லாரியின் பின்னால் வந்த கார் மற்றும் மினி லாரி ஆகியவை அடுத்தடுத்து மோதி விபத்தானது. கண்டெய்னர் லாரி மோதியதில் டிராக்டரில் வந்த ராஜா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், காரில் வந்தவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த கோர விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி