விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் மகா சனி பிரதோஷ விழா ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
சனி மகா பிரதோஷ விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், விபூதி, உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பாக அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாரனை நடைபெற்றது இதில் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.